search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீர் பாட்டில்"

    • தலையில் இருக்கும் பீர் பாட்டில் கீழே விழாதவாறு லாவகமாக ஆடுவது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
    • வீடியோ 54 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    உணவு விடுதி ஒன்றில் மூதாட்டி ஒருவர் பீர் பாட்டிலை தலையில் வைத்து கொண்டு அமிதாப் பச்சன் படப்பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    புடவை கட்டிய அந்த மூதாட்டி, அமிதாப்பச்சனின் 'லாவரிஸ்' படத்தில் இடம்பெற்ற 'மேரே ஆங்னே மே' என்ற பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடுகிறார். இடை, இடையே விரல்களை வாயில் வைத்து விசில் அடித்தபடி அவர் நடனம் ஆட, அவருக்கு அருகே ஒரு வாலிபரும் நடனம் ஆடி மூதாட்டியை உற்சாகமூட்டுகிறார்.

    தலையில் இருக்கும் பீர் பாட்டில் கீழே விழாதவாறு லாவகமாக ஆடுவது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த வீடியோவை சித்தேஷ் போபாடி என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வீடியோ 54 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலர், மூதாட்டியின் நடனத்தை பாராட்டினர். அதே நேரம் சில பயனர்கள், பீர் பாட்டிலை தலையில் சுமந்து ஆடுவதை விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.


    • வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
    • விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    மதுராந்தகம்:

    திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி பீர் பாட்டில் ஏற்றிக்கொண்டு நேற்று நள்ளிரவு லாரி சென்றது. இரவு 12 மணியளவில் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் லாரியில் இருந்த பீர்பாட்டில்கள் உடைந்து பீர் ஆறாக ஓடியது. நள்ளிரவு நேரம் என்பதால் லாரியை மீட்டு அதில் இருந்த பீர் பாட்டில் பெட்டிகளை வேறொரு லாரிக்கு மாற்றமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் மின்விளக்கு இல்லை. இதைத்தொடர்ந்து மதுராந்தகம் போலீசார் லாரி கவிழ்ந்த இடத்தில் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் விபத்து நடந்த சிறிது நேரத்தில் போலீசார் வருவதற்கு முன்பே அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர். அவர்களை போலீசார் எச்சரித்தனர்.

    இதையடுத்து பீர்பாட்டில்களை எடுத்தவர்கள் அங்கேயே ஆங்காங்கே வீசி விட்டு சென்றனர். அந்த பீர் பாட்டில்களை போலீசார் சேகரித்தனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இன்று காலை மீட்பு வாகனம் வந்ததும் லாரி மீட்கப்பட்டது. எனினும் ஏராளமான பீர்பாட்டில்கள் உடைந்து வீணானது. சாலை யோரம் லாரி கவிழ்ந்து கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரில் ராஜன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜன் மற்றும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சக்தி மணிகண்டன் (வயது 32). இவர் வடசேரியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    அந்த பாரில் புதுகுடியிருப்பு தேவசகாய தெருவை சேர்ந்த ராஜன் என்ற கட்டை ராஜன் என்பவர் மது குடிக்க வந்துள்ளார். அப்போது பாரில் ராஜன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை பார்த்த சக்திமண்கண்டன் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அவரை அங்கிருந்து வெளியே அனுப்பினர். இந்த நிலையில் பணிமுடிந்து சக்தி மணிகண்டன் இரவு வடசேரி பஸ் நிலையம் அருகே சென்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ராஜன் மற்றும் 3 பேர் சேர்ந்து சக்தி மணிகண்டனை தடுத்து நிறுத்தி தாக்கி, பீர் பாட்டிலால் தலையில் அடித்து குத்தியுள்ளனர்.

    இதில் சக்தி மணிகண்டன் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சக்திமணிகண்டன் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து சக்திமணிகண்டன் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜன் மற்றும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    • பெண் விஷயமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது
    • போலீசார் விசாரணை நடத்தி தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகரை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகன் அன்பு (வயது 37).

    இவர் மீது குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அன்புக்கும் அதே ஊரை சேர்ந்த ஏசுதாசன் என்பவருக்கும் பெண் விஷயமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அன்பு ஆரல்வாய்மொழி பஞ்சாயத்து அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஏசுதாசன் மற்றும் அவரது மகன் சுதன் ஆகியோர் வந்தனர். அவர்களுக்கும் அன்புவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அன்பு பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு உள்ளார். காயம் அடைந்த அவர், ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிரதீப் குமார் தகராறு செய்து, பீர் பாட்டிலால் ராஜீவ் காந்தியை தாக்கினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்குமாரை கைது செய்தனர்.

    மதுரை

    கீழகள்ளந்திரியை சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகன் ராஜீவ் காந்தி (36). இவர் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். மதுரை ஆண்டார் கொட்டாரம், அய்யனார் நகரை சேர்ந்தவர் பிரதீப் குமார் (46). இவருக்கும், ராஜீவ்காந்திக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பாண்டிகோவில் ரோட்டில் உள்ள பாரில் ராஜீவ் காந்தி, பிரதீப் குமார் ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப் குமார் தகராறு செய்து, பீர் பாட்டிலால் ராஜீவ் காந்தியை தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ராஜீவ் காந்தி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப்குமாரை கைது செய்தனர்.

    • உடைந்த வேகத்தில் பீர்பாட்டிலின் கண்ணாடி சிதறி செந்தில்குமாரின் கண்ணில் பட்டது.
    • டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள திம்மம்பாளையத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த கடையில் அங்களக்கரைபுதூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது40) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாடிக்கையாளர் ஒருவர் மதுவாங்குவதற்காக டாஸ்மாக் கடைக்கு வந்தார்.

    அவர் கடையில் இருந்த செந்தில்குமாரிடம் 2 பீர்பாட்டில்கள் தருமாறு கேட்டார். இதையடுத்து செந்தில்குமாரும் பாட்டில்களை எடுத்து வந்தார்.

    பின்னர் அந்த பாட்டில்களில் ரூ.10க்கான ஸ்டிக்கர் ஒட்டினார். ஒரு பாட்டிலில் ஒட்டி, அதனை வாடிக்கையாளரிடம் கொடுத்து விட்டு, மற்றொரு பாட்டிலில் ரூ.10க்கான ஸ்டிக்கரை ஒட்டி கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பீர்பாட்டில் உடைந்தது.

    உடைந்த வேகத்தில் பீர்பாட்டிலின் கண்ணாடி சிதறி, செந்தில்குமாரின் கண்ணில் பட்டது. இதில் கண்ணாடி அவரது கருவிழியை கடுமையாக தாக்கியது.

    வலியால் அலறி துடித்த அவரை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கண் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    அப்போது, கருவிழியில் கண்ணாடி கடுமையாக தாக்கியதில் கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்குமாரை கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    மேலும் அவருக்கு உரிய சிகிச்சை விரைவாக அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாக கூறி சென்றனர். இதற்கிடையே வெயிலின் தாக்கத்தாலேயே பீர்பாட்டில் வெடித்ததாக கூறப்படுகிறது.

    • மகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • மூத்த மகன் ராஜராஜசோழன் அம்மாவை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டதற்கு பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் கிழித்துள்ளார். 

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவ ட்டம், மணல்மேடு காவல் சரகத்துக்கு உட்பட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் இவரது மகன் மகாதேவன் (53) இவரது மனைவி அமுதா (37) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதும் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளாக கூறப்படுகிறது.

    மூன்று மாதங்களுக்கு முன்பு மனைவியின் வலது கையை உடைத்துள்ளார். இந்நிலையில் இரவு மனைவியிடம் 500 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு குடித்துவிட்டு இரண்டு பீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் மூத்த மகன் ராஜராஜசோழன் அம்மாவை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டதற்கு பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் கிழித்துள்ளார். தடுத்த மனைவியை அரிவாளால் வெட்டை முயன்றபோது. அதனை பறித்து மனைவி, கணவனை கழுத்தில் வெட்டியுள்ளார்.

    இதில் சம்பவ இடத்தி லேயே மகாதேவன் உயிரி ழந்தார். பின்னர் தன் மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்குசென்று கணவனைகொன்று விட்டதாக சரணடைந்து ள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து ள்ளனர். கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×